By Soorya N

திவாகர் தன்னுடைய தங்கை செண்பகத்தை காண, போன வாரம் , செவ்வாய்க்கிழமை சென்றான்.இன்று வெள்ளிக்கிழமை .

ஒன்பது நாள் ஆகிவிட்டது. இன்னும் அவர் வரல. போன் பண்ணல .நாளைக்கு வரேன், நாளைக்கு வரேன்னு  ரெண்டு நாளா சொல்றார். அவர் வந்தாதான், வீட்டு வாடகை, சாமான், காய்கறி , ராஜாவுக்கு மாச வட்டி எல்லாம் கொடுக்க முடியும். இதுல மாத்திரைலாம் வேற வாங்கணும்.

இரண்டாம் தேதியே எல்லாம் என்ன வந்து வரவேற்பாங்க.வட்டி காரன்ல இருந்து ரேஷ்மா வரைக்கும்.இவள் இதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே , முதல் ஆள் வந்து விட்டான்.

முதல் ஆள்

என்னமா  ஹேமா ? எப்போ தருவ வட்டிய . ஏற்கனவே ரெண்டு மாச கணக்கு இருக்கு. இது மூணாம் மாசம் என்று பேசும்போது ஹேமா வந்து ‘இந்தாங்கன்னே காபி. சீக்கிரம் கொடுக்க பாக்கறேன் . ஏமாத்த மாட்டேன் . அவங்க வந்துடுவாங்க(திவாகரை) , வந்தோன வர சொல்றேன் உங்கள பாக்க . என்ன வந்து பாத்தா மட்டும் போதாது, கைல கொஞ்சம் ரொக்கமும் கொண்டு வர சொல்லு.  வட்டிக்காரனுங்கல்லாம் உங்களுக்கு எமனா  தெரியுறானுங்கள்ள ,என்றார் . அதெல்லாம் இல்லைங்க. நா அவரு வந்தோன்ன தர சொல்றேண்ணே ,உங்கள வந்து பாத்துட்டு  கொஞ்சமாச்சும்  தர  சொல்றேன்  என்றால் .

 சரி சீக்கிரம் வந்தா நல்ல இருக்கும் என்று கொஞ்சம் அதட்டலாக சொல்லி , நா வரேன்! என்று சொல்லி அவர் புறப்பட்டார்.அவரைஅனுப்பிவிட்டுசமயலறைக்குசென்றால், பாலைபிரித்துபாத்திரத்தில்ஊற்றினால், டிகாஷனுக்குபோடிபோட்டுக்கொண்டிருக்கும்போது, அவளுக்குபோன்வந்தது. திவாக்கராஇருக்கும்என்றுநினைத்துபார்த்தால் .மளிகைஜெயம்அக்காஎன்றுஇருந்துது. உடனேஎடுத்தால்.

இரண்டாம் ஆள்.

சொல்லுங்கக்கா! மொத்தம் ஐநூத்தி நாற்பது ரூபா இருக்கு. எப்போ தரர்தா உத்தேசம் ? ஒரு கிலோ தக்காளி வாங்கிக்கிற, இநாமா  கொத்தமல்லி கேக்கற ஆசையா.ஆனா ஒரு அரை கிலோ தக்காளிக்காச்சும் காசு கொடுக்க சொன்னா. அக்கா காசு கேட்டுட்டாங்கன்னு தம்பட்டம் அடிக்கற. பச்சைமிளகாவா கோவப்படுற .நான்லாம் ஒரு கிலோ ஜீனியே கடனா தர மாட்டேன் யாருக்கும் ,நீ ஏதோ தெரிஞ்ச பொண்ணாச்சேன்னு குடுத்தா, திருப்பி தரவே மாட்டேங்கிறியேமா .

ஒரு காள் கிலோக்கான காசியாச்சும் தர பாருடி . அக்கா நா தறேன்,கொஞ்ச டைம் தாங்க .இவள் பேசும்போதே, அங்கே இன்னொரு பேச்சு சப்தம் கேட்டது,’மேடம் ஒரு கிலோ சீனி  குடுங்க என்று ஒரு குரல் கேட்க  போனில், முப்பது ரூபாய் என்று அக்கா சொல்ல, பக்கத்து தெருவில் தான் இருக்கேன், காச வந்து தரேன் என்று சொல்லும்குரல்கேட்டதுஇவளுக்கு, ‘சரி சார்’என்று அதே அக்கா  சொல்வது கேட்டது.

“சரி”சரி” சீக்கிரம் தா என்றுஅலட்சியமாக சொல்லி போனை வைத்தாள். இந்த அக்காவாச்சும்  என்னய புரிஞ்சுப்பாங்கன்னு நினைச்சேன் , இவங்களும் என்கிட்ட இல்லைன்னு சொல்லிட்டு, எவனுக்கோ தரேன்னு சொல்றாங்க. நான் என்ன ஓடியா போய்ட்டேன், வாய்க்கு சக்கரையா பேசுவாங்க, ஆனா காசு தள்ளி போச்சுன்னா மட்டும், நம்மள புது ஜாதியா பாக்கறாங்க. என்ன ஊரோ, என்ன காசோ. என்று சகித்தால்.

போனைவைத்துவிட்டு, திவாகருக்குபோன்பண்ணிபாக்கலாம்என்றுபோன்செய்தால், “அவுட்ஆப்ஆர்டர் “என்றுசொல்லிநின்றது. என்னதான்பண்றான்இவன் ?அக்காவீட்டுக்குன்னுபோய்ட்டாஎண்ணெயைமறந்துடுவான் .பால்பொங்கும்நிலைமையில்இருந்துது ,அதைநிறுத்தகாத்துக்கொண்டிருந்தால். டிகாஷன்இறங்கிடிச்சு ,பால்போங்க , அதைநிறுத்தினால், ஒருகுரல்கேட்டதுவெளியில்இருந்து.

ஹாலுக்குவந்துயார்என்றுபார்த்தால்.மளிகைகாரர்

மூன்றாம் ஆள்.

மா மளிகை!

இன்னைக்கு என்ன இரண்டாம் தேதியா என்ன ? எல்லாம் வராங்க.தேதியை பாப்போம்,திரும்பவும், மா மளிகை! என்ற குரல் கேட்டது. வரேங்க என்று ஓடினாள் எரிச்சலாய்.

மொத்தம் மூவாயிரத்தி முப்பத்தெட்டு ரூபாய் . ‘தம்பி , நா ஏதும் ஆர்டர் பண்ணலையே . இது திவாகர் அன்னே   வீடுதானே   . ஆமா . அவரர்தான்  முந்தாநாள்  போன்ல  பண்ணார் .

 அப்படியா . இவன் வாட்டுக் சொல்லாம பண்ணிடறான் , இப்போ இவங்களுக்கு காசு யாரு குடுக்கார்றது ? இரு, நான் அவனுக்கு போன் பண்றேன். மேடம். அவர் போன் போகல , நா முதல்ல அவருக்குதான் போன் பண்ணேன் , அப்பறம் அட்ரஸ் கேட்டு நானே வந்தேன். 

ஓஹோ ! அவளும் போன் செய்து,அவுட் ஆப் ஆர்டர் என்ற செய்தியேதான் கேட்டால் மறுபடியும்.

சரி, நா வந்து கடைல அண்ணாச்சி கிட்ட தரேன் தம்பி.அவருக்கு எங்களை தெரியும் . இருங்கக்கா, அண்ணாச்சிக்கு போன் போட்டு தரேன் , நீங்களே சொல்லுங்க. இல்லாட்டி ஏசுவாரென்ன .

இல்லப்பா , எனக்கு அவர தெரியும், ஹேமான்னு சொல்லு.

இவள்சொல்லும்போதேரேஷ்மா வந்து கொண்டிருந்தாள் வெளியே இருந்து.

அவளை பார்த்து கொண்டே பேசினாள், இல்ல தம்பி நீ அவர்கிட்ட சொல்லுன்னு அவள் சொல்வதற்கு முன்பே, இந்தாங்க பேசுங்க என்றான். இவன் வேற, படுத்துறானே, அவ வேற நா இந்த நிலைமைல இருக்கேன்னு பாத்தா, சிக்கனம், செலவுன்னு பாடம் எடுப்பா. என்று முணுமுணுத்துக் கொண்டே போனை வாங்கினாள்.

 சார். என்ன ஆளே பார்க்க முடிய மாட்டேங்குது ? என்று கம்பிரமாய் பேசிய குரல் கேட்டது.

சார், நா அவரோட… ஓ ! நீயாமா ,  எங்கம்மா திவாகர் , காசு வேணுனா மட்டும் வரான். பொருளை வாங்குகிறான், அப்புறம் எங்க காணாம போயிடறான் . ஏற்கனவே, அவனோட தங்கச்சி வீட்டுக்கு சாமான் வாங்கி தரேன்னு ஒரு ஐயாயிரம் ரூபா இருக்கு, அப்புறம் நீ வேற முந்திரி, பாதாம்ன்னு போன மாசம் அல்வா பண்றேன்னு வாங்கின. ஆனா, கடைசி வரைக்கும் எங்க கண்ணுக்கு நீ அல்வாவ காட்டவே இல்ல, இப்பதான் புரியுது, நீ அல்வா குடுத்துட்டேனு.

இல்ல சார். நா உங்களுக்கு அவர் வந்தோன முதல்ல தர சொல்றேன் அவர் இந்த வேலையாதான் ஊருக்கு போயிருக்காங்க.

எந்தவேலைமாஎன்றுகொஞ்சம்மக்களுடன்கேட்டார்?

அவளுக்குகோபம்வந்தது, ஆனால், பொறுமையாகநாளைக்கு,இருப்பாருங்க. நா வர சொல்றேன்.

என்னமோ சொல்ற,நாளைக்கு அவன வந்து பாக்க சொல்லு. அனாவசியமா என்ன சேகர போயி பாக்க வச்சிராத . சார் சார், அதெல்லாம் வேணாம் , நான் தந்துடுறேன்.

சரி வை போன.

பெருமூச்சு  விட்டு, வீட்டுக்குள் வந்தாள்.என்ன இந்த ஆளு மிரட்றாரு , முதல இவனுக்கு குடுத்துட்டுதான் மத்தவங்களுக்கு.

பின்னாடியே ரேஷ்மா வந்தால். ரேஷ்மா! என்னோட காலேஜ் மேட். ரெண்டு பேரும் ஒரே நேரத்துல தான் வேலைக்கு போனோம். நல்லா சம்பாதிச்சோம். ஒரே ஷார்மார்கெட்ல பணம் சம்பாதிச்சோம்.

எங்கரெண்டுபேரோடநடப்பும்நல்லாதான்இருந்துது, நான்திவாகரசந்திக்கிறவரைக்கும். ரேஷ்மாஎப்போமேகொஞ்ச ‘மண்டைகணம்பிடிச்சபெண்மாதிரிபேசுவ, ஆனாரொம்பநல்லபொண்ணு .திமிராபேசுவா .ஆனா ,கொஞ்சம்யோசிச்சாஅதுலஉண்மைஇருக்கும் .

நான்திவாகரகாதலிச்சதுஅவளுக்குபுடிக்கல ,அதுக்குஒன்னுபெரியஆரவாரகாரணம்லாம்இல்ல, அவன்பணக்காரன்இல்ல, அவனைகல்யாணம்பண்ணஎன்நிலைமைரொம்பமோசமாயிடும் , எல்லாருக்கும்நீதான்பதில்சொல்லணும்னுசொன்னா.

என்னக்குதெரிஞ்சபய்யன்ஒருத்தன்இருக்கான், நல்லபய்யன்,

நல்லகுடும்பம்னுசொன்னா .ஆனாஎன்னபண்றது,  அதுக்குள்ளநானும்அவனும்காதலிச்சுட்டோம் , எங்கரெண்டுபேர்வீட்லயும்சம்மதம்பண்ணிகல்யாணம்பண்றத்துக்தயார்ஆயிட்டாங்க. அவளுக்குஅவவிரும்பினபய்யன்ஒசத்தி. பணத்தாலயும்ஒசத்தி, நாகீழபோய்ட்டேன்அவமனசுலஇருந்து. அன்னிலேர்ந்துஎன்னஅவவேறமாறிபாக்கஆரமிச்ச. இப்போவரைக்கும்தொடர்றது.

அவங்க வீட்ல, அவளுக்கு கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டா . அவ உடனே , தயாரா ஒரு பதில் சொன்னா . நீங்கல்லாம் பையன் பாக்க வேண்டாம், நானே பாத்து வச்சிட்டேன் , வந்து அக்ஷதை மட்டும் போடுங்கன்னு சொல்லி. கல்யாணம் பண்ணிட்டு. போய்ட்டா.

என்னோடசூழலும்அதுக்குஏத்தமாறியேஇருக்கு,இப்போ நாங்க அவளோட புருஷன் வாடகைக்கு விட்ட வீட்டுல தான் நாங்க இருக்கோம் . மாச மாச வாடகை வரலைனா, வீட்டை தயவு செஞ்சு காலி பண்ணிடு நீ’ என்று போன வாட்டியே சொல்லிட்டு போயிட்டா.

சாரி. சொல்லிட்டாங்க , மரியாதை கொடுக்கணும் இனிமே. இன்னிக்கு என்ன சொல்ல போறாளோ.

ஹேமா ! ஹேமா! என்று குரல் அதட்டலுடன் கேட்டது.

இவள் பயத்துடன் சென்றால். வாங்க ! உள்ள வாங்க. அதெல்லாம் வேனாம் , எப்போ உன்னால வாடகை குடுக்க முடியும் ? இந்த…. அதுக்காகத்தான் அவரு ஊரு வரைக்கும் போய்ருக்காருங்க , நா வந்தோன்ன, உங்களுக்கு குடுக்க சொல்லிடறேன் முதல்ல. அவள் குரலை ஒசத்தி, கர்வத்துடன் ‘ இந்தா பாரு ஹேமா ! ஏதோ தெரிஞ்சவளேன்னு வீடு குடுத்தேன், ஆனா மாசம் மாசம் என்னால உன்கூட தொங்கிண்டே இருக்க முடியாது.

திவாகருக்கு போன் பண்ணி குடு. இந்தா வரேங்க என்று பதற்றத்துடன் போனை எடுத்து வரும் முன்னமே, நீ இரு நானே பண்றேன் . “சுவாமியப்பா” சரணமப்பாஎன்று போன் பாடியது. “இடியட்! பாட்டு மட்டும் வெச்சா பத்தாதுன்னு உன் புருஷன்கிட்ட சொல்லு. ஊற ஏமாத்த சாமி பெர் வேற . பெருமாளே என்று சொன்னால் ரேஷ்மா . ரெண்டு வாட்டி போன் பாடி நின்றது .

அவள் உடனே கொஞ்சம் வெளியே சென்று, மேடம் , நீங்க வாங்கோ மேடம் . ஒரு நான்கு பேர்கொண்ட குடும்பம் வந்தது. இதான் நா சொன்ன வீடு, அப்பாவோடதுதான் , நல்ல பெரிய வீடு, ரெண்டு பெட்ரூம்.  வராண்டா இருக்கு, தண்ணி பிரச்சனை  கிடையாது. ஹேமா அவர்களை பார்த்தால், ரேஷ்மா அவர்களுடன் பேசிக்கொண்டே வந்தாள். இவர்களை பார்த்தவுடன், ஓரமாய் ஒதுங்கி நின்றாள்.

 அது யாரு  என்று கூடவந்தவர்களில் ஒரு அம்மா கேட்டால். அம்மா, அவதான் இங்க இருக்கா, வர முப்பதோட காலி பண்றா என்று ஹேமாவை பார்த்துக்கொண்டே சைகையாய் முறைத்து சொன்னால். இது இவ சொல்லவே இல்லையே என்று நினைத்தால் ஹேமா.

நீங்க வாங்கோ, ஆத்த பாருங்கோ.எல்லோரும் சுற்றி பார்த்தார்கள். பாட்டி, முகத்தை சுழித்து கொண்டு,

அருவெறுப்பாக மூலையில் இருந்த துணிகளை பார்த்தும் , கீழே புழுதி அடைந்து பெருக்காமல் இருக்கும் இடத்தை பார்த்துக்கொண்டே நடந்தால்.குழந்தைக்கு வராண்டா ரொம்பவும் பிடித்திருந்தது , துள்ளி துள்ளி குதித்தது .குழந்தைக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வீடு என்று குழதையின் அப்பா சொன்னார்..ஏண்டி! வீட்டகொஞ்ச சரி பண்ணனும் போலருக்கே. என்னக்கு அடுத்த மாசம் வேணும். வீட்ட பாத்தா ரொம்ப வேலை இருக்கும் போலருக்கே, ஒரு ப்ராஹ்மண வீடாவே  இல்லையே. ஹேமா அவள் பேசுவதை பார்த்துக்கொண்டே இருந்தால்.

இல்ல மேடம், நா உங்களுக்கு எவளவு சீக்கிரமா பண்ணி தரணுமோ, நா ரெடி பண்ணி தரேன். சுத்தமாவே ஈள்ள, அங்கங்க அழுக்கு துணியும் கசங்கி இருக்கு, ஒரு லக்ஷணமே இல்ல வீட்டுல. ஒரே அழுக்கு வாட, என்ன ஏதாவது ‘அசைவம்’ சமைச்சியாமா என்று ஹேமாவை பார்த்து கேட்க. அவள் தலையை இல்லை என்று அசைத்தாள். 

அதெலாம் நீங்க கவலையே படாதீங்கோ, நா உங்களுக்கு புடிச்ச மாறி பண்ணி தரேன்.

சரிடி! நீ பாத்து பண்ணிட்டு கூப்புடு, நா வந்து பாத்த அப்பறம்தான் சொல்ல முடியும். ஏன்னா , உங்கப்பா இந்த ஆத்த வச்சுண்டு இருந்தப்போ  நா பாத்தேன்.கோவில் மாறி இருக்கும்.அதே மாறித்தான் இருக்கும்னு நினைச்சோம், ஆனா இங்க வீடு வீடாவே இல்ல.

நீ ரெடி பண்ணு முதல்ல, பண்ணிட்டு என்னக்கு சொல்லு, நா வந்து பாக்கறேன்.  அப்பறம்தான் மத்ததெல்லாம்.போலாமா?  எல்லோரும் வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டே நடந்தார்கள் .

“பாட்டி”, தண்ணி வேணும் என்றான் பேரன். டேய்! கேசவ,செத்த நாழி இருடா , நம்ம வெளில போயி சர்பத் குடிக்கலாம் , இங்க வேண்டாம் என்றான் அப்பா .இங்க இடமே கொஞ்ச நன்னா இல்ல. ஹேமாவை பார்த்தாள் பாட்டி . ஹேமா ஓரமாய் நின்று கொண்டிருந்தாள்.

யாரடி அது சொன்ன? மறந்துபோய்ட்டேன்.  அவங்கதான் இங்க குடியிருக்காங்க . அவள் மூக்கண்ணாடியை மேலே தள்ளிக்கொண்டு “ஈஸ்வரா ” என்று புலம்பினவாறே பொறுமையாக சென்றால்.

ரேஷ்மா ! அவர்களை அனுப்பிவிட்டு வந்து, நாளைக்கே உன் புருஷன என்னைக் போன பண்ண சொல்ற என்று அழுத்தமான குரலில் சொன்னாள். இன்னு ரெண்டு வாரத்துல காலி பண்ற வீட்ட. அவா என்ன சொன்னா பாத்தியா ? ஒரு கணம், ஹேமாவை தோழி என்ற நினைப்பில் பேசினாள். ஒரு வினாடி நிறுத்தி. அவங்க என்ன சொன்னாங்கனு பாத்தியா? வீட்டை நாசம் பண்ணி வச்சிருக்க. பாக்கப்போனா , இதுக்கும் சேத்துதான் பைசா வாங்கணும், ஏதோ கொஞ்ச இரக்கம் இன்னு என்னைக் ஓட்டிட்டு இருக்கு உன் மேலே. தயவு செஞ்சு வாடகையை குடுத்துட்டு வீட்ட காலி பண்ணிடுங்கம்மா என்று சொல்லி புறப்பட்டாள்.மாச மாசம் என் வீட்டுக் பைசா வாங்க எண்ணெயை அலையவிடறாங்கப்பா என்று சொல்லி கிளம்பினாள்.

                               2

ஹேமா நடந்தது கனவா நினைவா என்று தெரியாமல், மனம் உடைந்து நடந்தால். அறையின் நடுவில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து ‘திவாகர்’ என்று கோப பட்டாள்.

இதுக்கு பேருதான் தலையெழுத்து , ஒழுங்கா அப்பவே போயிருக்கணும் இவன விட்டு , சரியாவான்னு பாத்தது என்னோட தப்புதான். போடறேன் அவனுக்கு போன .திரும்பவும் போன் செய்தால் திவாகருக்கு.”அவுட் ஆப் நெட்ஒர்க்” என்று போனில் தகவல் வந்தது.

ஐயோ ! கண்ணை மூடி உட்கார்ந்தாள்.  கொஞ்ச நேரம் நடந்ததை நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டாள்.

அடுத்து யாரு வர போறாங்க, எவ்வளவு கேக்கபோறாங்கன்னு தெரியலையேஅவரோட தங்கச்சிக்கு போன் பண்ணலாம் , என்னதான் பண்றான்னு கேக்கணும்.

போன் செய்தால். முதல் ரிங்கில் அவள் போன் எடுத்தாள்.

“ஹாய் ஹேமா, சொல்லுங்க,” எப்படி இருக்கீங்க. அதெலாம் வுடு , உங்க அண்ணா என்ன பண்றாரு அங்க ? 

என்ன ஆச்சு ஹேமா . ஏன் இவளவு பதட்டம் ?

இங்க கடன்காரங்களா வந்து நின்னுட்டு இருக்காங்க.என்னால தாங்க முடியல, அந்த ரேஷ்மா கேவலமா வீட்டை மாத்துன்னு வந்து சொல்லிட்டு போறா, உங்கண்ணன் எப்போ அங்க வந்தாரு. ஒரு வார ஆச்சு .ஒரு போன் பண்ணல . அவள் குறுக்கிட்டு .

இருங்க இருங்க, பதட்ட படாதீங்க, அண்ணா அப்பாவோட மில் வரைக்கும் போயிருக்கார்.

அவரு போன் என்ன ஆச்சு ?அதுவா , நெத்தி பய்யன் போன தண்ணீல போட்டுட்டான். அதான் சரி பண்ண கடைல குடுத்திருக்கார்.உங்களோட ஒரே தொல்லை என்னக்கு எப்பவும் . 

 சரி அவரு வந்தா, உன் போன்ல இருந்து கூப்பிட சொல்லு. இங்க தொந்தரவா இருக்கு.

சரி, நா பண்ண சொல்றேன்.

 வேற என்ன ஹேமா என்று கேட்கும் முன்பே அவள் போனை கட் செய்தால்.

என்ன ஹேமா இவளவு கோபமா பேசறா ? ப்பா , படபடன்னு வெடிச்சிட்டா .

போனை ஆத்திரத்தில் வைத்தவள் சில நிமிடங்களுக்கு பிறகுதான் நினைவுக்கு வந்தால் .கடிகாரம் பார்த்தால், மணி ரெண்டு ஆச்சா . எதுவுமே சாப்பாடு பண்ணல இன்னைக்கு. ஏதாவது இருக்கா என்று சமய அறையை உட்கார்ந்துகொண்டு பார்த்தால்.காலையில்போட்டுவைத்தபுதுடிகாஷன்திறந்துஇருந்தது ,பால்வாடிப்போகும்அளவிற்குஊசலாடாமல்இருந்துது.

நாகாபியேகுடிகளைலஇன்னிக்கிஎன்றஎண்ணம்அவளுக்குஇப்போதுதான்வருகிறது.

எல்லாம் அடுக்கி வைத்து சுத்தமாக கௌதிரிந்தது. பசிக்குது, ஆனா , சாப்பாடு பண்ண ஆசை இல்ல. சாப்படணும்னு வயத்துக்கு தோணுது. மூளை ஆனா ! கடன்காரன் வருவானே. எனக்கு குடுக்காம நீ மட்டும்

சாப்பிடறியா என்று கேட்டா  என்ன சொல்ல அவன்கிட்ட .

ஐயோ! இல்லைங்க , நானே கொஞ்சம் பேர் வீட்ல போயி, கையேந்தி வாங்கி வந்தேன் . இது என் சோறு இல்ல , என்னய சாப்டா விடுங்க நிம்மதியான்னு சொன்னா போய்டுவாங்க என்று அவள் தன்னைக்கு தானே சொல்லிக்கொண்டாள் . கொஞ்ச சாப்ட்டுக்குறேங்க, கொஞ்சம்,- கொஞ்சம்- என்று நடிக்கும் பெண்போல பாவனை செய்தால். பைத்தியம் தான் பிடிக்கிது என்னக்கு என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டாள் . கொஞ்சம் குடுங்க , என்று கெஞ்சுவது மட்டும் அவளால் உணரமுடிந்தது . ஏதோ நினைப்பில் கையில் இருந்து போன் கீழே விழ, அவள் கையில் இருந்து சாப்பாடு விழுகிறது என்று நினைத்து நினைவுக்கு வந்தால் .

கனவா!

இவளவு உண்மையா இருந்துது. ஒருவேளை, என்னோட எதிர்காலம் இப்படித்தான் இருக்குமோ? ஆனா திவாகர் அதுல காணும்? நான் மட்டும்தான் கணவலையும் இருக்கேன .ஒருதடவை ஏமாந்தது போதாதா என்று சொல்லி எழுந்து  சமையல் அறைக்கு சென்றால்.

எல்லா பாத்திரத்தையும் திறந்து பார்த்தால்,எல்லாம் காலியாக இருந்துது.அரிசி மட்டும் இருக்கு, வெறும் சாதம்வெச்சு மோர் சாதம் சாப்டியாவேண்டியதுதான்  .அரிசியை கிடைஞ்சு, குக்கரில் சாதம் வைத்தால். பக்கத்து வீட்டுல, சோஃபி இருந்தான்னா, கொஞ்ச காரக்குழம்பு வாங்கிக்கலாம், ஆனா அவளும் ஊருக்கு போயிருக்கா. சரி, இதையே திம்போம் இன்னைக்கு. கொஞ்ச நேரம் மூச்சுவிட்டால் . மதிய உணவு நேரம் என்பதால், வேறு யாரும் அவளை அழைக்கவோ, வீட்டுக்கு நலம் விசாரிக்கவோ வரவில்லை. கொஞ்சம் மனம் அமைதியானது.

கொஞ்ச நேரம் நம்ப பூக்காச்சும் படிக்கலாம் என்று ஒரு புக்கை எடுத்தால்.

“தேர்ந்தெடுத்த காதல் சின்னம்”

பெயர் நல்ல இருக்கே, என்ன மாறியே ஒரு பொண்ணு அதுல ஏக்கத்தோட இருக்கா . என்ன சொல்றான்னு பாப்போம்.

முதல் பக்கத்தில், “With Love Dhivakar ” என்று எழுதி இருந்துது.

இது கதை மாறி இல்லையே, ஓ! கவிதையா .ஓஹோ ! இது நம்பாளு எனக்கு எழுதிய கவிதை புக்கா இது .”என் மனதில் வாழ்ந்து வரும் ஒளியே நீயடி”

“என் கனவை நினைவாக்க வந்த மறுஉயிர் நீயடி” 

உன்னை நான் என் உள்ளங்கையால் தாங்கிப்பிடிப்பேனேடி

என் ரேகையால் உன் கையில் அழிந்து போன ரேகைகளை சேர்ப்பேனடி 

உன் சிறிய உலகில் என்னக்கு ஒரு இடம் தந்தாள் ,அதில் நான் கூடு கட்டுவேனடி என் உயி…. 

அவளுக்கு சற்று கண்ணீர் வர துடங்கியது ,ஏமாற்றமும் சோகமும் கோபமும் முகத்தில்தாண்டவமாடியது .புத்தகத்தை மூடிவிட்டால் ….

புத்தகத்தின் மேல் ‘சொட்டு’ சொட்டாய் கண்ணீர் வழிந்தது .ரேஷ்மாசொன்னது, அவள்திவாகரைகல்யாணம்செய்துகொள்ளாதேஎன்றுசொன்னது, பாட்டிஇவள்வீட்டைபார்த்துஅருவெறுப்பாகபார்த்தது, மளிகைஅக்காசெய்தகாரியம்என்றுஇவளுக்குஎல்லாமும்சேர்ந்துகண்ணீர்கண்ணீராய்விழாதுடங்கியது .

சிறியஇடைவெளிக்குபிறகு, மறுபடியும்ஒருகேட்டது

மா ! பால் .  

வந்துட்டாண்டா அடுத்து. மூக்குல வேர்க்கும் போல இவங்களுக்கு. வரேங்க .. கதவை திறந்தாள். சலுத்துக்கொண்டு .

பால் காரர் ! கையில் ஏனத்தோடு நின்னுகொண்டிருந்தார். பால் ஏனம் கொண்டு வாம்மா . நீங்க காலைல பால் கொண்டு வரலையா ? நா நாளைக்கு காலைல கொஞ்ச ஊரு வரைக்கும் போறேன். அதான் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் இப்பவே தந்துறேன் . அப்படியா அண்ணா. இருங்க வரேன் என்று ஏனத்தை எடுத்துவந்தால்.

அவர் பாலை ஊத்தி வரேன்ம்மா என்றார். ஹேமா உணர்ச்சிவசப்பட்டு. ‘அண்ணா !

சொல்லும்மா !

காசு, ஒரு ரெண்டு மூணு நாள்ல தறேன்ன்னா .

 அட ! வாங்கிக்கறேன் , நீதான் எங்க போகப்போற , நா எங்கபோறேன். உன்னக்கு செலவு ஏற்கனவே ஜாஸ்த்தியா  இருக்கும், இதுல என்னோட கனக்க அப்பறம் பாத்துக்கலாம். சரியா என்றார்.

தேங்க்ஸ் அண்ணா !

“வரேன்” என்று சொல்லி அவர் புறப்பட்டார். 

அவரை பார்த்து “இப்படியும் மனிதர்கள்” இருக்காங்க என்று கொஞ்சம் பெருமை பட்டுக்கொண்டு வீட்டுக்குள் சென்றால்.

குக்கர் விசில் அடித்தது. ஒன்று… இரண்டு…மூன்று…நான்கு… கொஞ்ச நேரம் பிறகு, குக்கரை திறந்தாள்.

தட்டில் சோற்றை போட்டுகொண்டு, கொஞ்சம் தயிரை ஊற்றி. கூடத்தில் வந்து உக்காந்து, அவளும் தட்டும் மட்டும் இருந்த அமைதியைஉணர்ந்தவாறேசாப்பிடதுடங்கினாள்.

போன் அடித்தது…….

                                                            3

திவகர்த்தான் என்று நினைத்து உடனே எழுந்து போனால்.

ஆணின் குரல் கேட்டது. ” எப்படி இருக்கீங்க ஹேமா ?

நீங்க யார் என்றாள் ?

என்னங்க ஹேமா.. நாந்தான் துணிக்கடைல இருந்து பேசறேன். மறந்துடீங்களா ?

ஐயோ ! என்று தலையில் அடித்து. இவரே மறந்தே போய்ட்டேன் என்று அழுத்தமாக சொன்னால் வாயை திறந்து சப்தம் வராமல் .

சார்! சாரி. குரல் ஞாபகம் இல்ல. சொல்லுங்க சார்.  என்ன சொல்லட்டும் ? சுரிதார் கணக்கா ? புடவை கணக்கா ? இல்ல , உங்களுக்கே தெரியாம “திவாகர் வந்து அவங்க தங்கிச்சுக்கு, அவங்களோட பையனுக்கு, அப்பா, அம்மா, அப்பறம் இன்னு கொஞ்ச பேருக்கு எடுத்தானே ? இல்ல, நீங்க உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு நீங்க எடுத்ததையா ? எதை சொல்றது.

என்ன மேடம், வாங்கிட்டு போயி, மூணு மாசம் ஆச்சு, ஒரு மாசம் கூட குடுக்கலையே ?

சாரி சார். அவருக்கு கொஞ்சம் வேலைல பிரச்சனை, அவரோட அம்மாக்கு வேற உடம்பு சரியில்லமா இருக்காங்க. அதான் குடுக்க முடியல.

அதுல்லாம் இருக்கட்டும் . என்னோட மாதாஜிக்கும் தான் உடம்பு சரியில்லை, என்னக்கு பைசா தேவை இருக்கு நீ இந்த மாசமும் பைசா குடுக்கலைனா, அடுத்த மாசத்துல இருந்து, நீ எனக்கு வட்டியோட குடுக்கணும் பைசாவ. புரிஞ்சிதா. சீக்கிரமே குடுக்க பாருங்க .

போன் துண்டிக்கப்பட்டது.

அவள் சாதத்தை கையில் ஒரு ஒரு பருக்கையாய் எடுத்து, போனில் எத்தனை நம்பர்கள் இது போல் உள்ளது என்று தேடினால். காய்கறி, பால்,துணிக்கடை, மளிகை , போன் கடை என்று பெயர்கள் போய்க்கொண்டே இருந்துது. 

மணி முணு ஆகபோது. என்ன பண்ணப்போறேனே தெரியல. நானும் பேசாம ஊருக்கு கிளம்பி போகப்போறேன், இன்னைக்கு ராத்திரி. அதுதான் ஒரே வழி. இங்க இவனும் பைசா கொண்டுவராம. நான் மட்டும் இங்க இருந்து எதுக்கு அசிங்க படனும்.

சாதம் சாப்பிடும் விருப்பம் இல்லாமல், அதை கொட்டிவிட்டு, பாத்திரம் தேய்த்துக்கொண்டே பேசினால் ….

“ஒழுங்கா. நா கொஞ்சம் திமிரா, பிடிவாதமா ,இருந்திருக்கணும். அவன் ஒழுங்கா குடும்பத்தை பாத்துப்பான்னு விட்டது, எனக்கே பிரச்சனையா வந்து நிக்கது. அவன் வரட்டும் இந்த வாட்டி. என்று கோவமாய், பேசிக்கொண்டே இருந்தால்.

எனக்கு தெரிஞ்ச எல்லாரும் எண்ணெயை கை விட்டாங்க. நான் என்னமோ இந்த ஊற விட்டு போகப்போற மாரி, பேசறாங்க. யார் இங்க நல்லவங்கனு சொல்றது. யார கெட்டவங்கன்னு வர்ணிக்கறது . சொல்லுடி ஹேமா . சொல்லு. அவளுக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை , எப்படி கிடைக்கும் ? கண்ணாடி முன்னாடி நின்னு பேசினா ஒரு பதிலும் கிடைக்காது. நம்மளே இத சரிசஞ்சாதான் உண்டு. 

எத்தனை பொய் , எத்தனை பொய் கதைகள் ,எத்தனை பேர்கள் , நாளைக்கு தர சொல்றேன் , அவருக்கு வேலை பிரச்னை , அம்மாக்கு ஒடம்பு சரியில்ல இன்னு என்னென்ன … சொல்றது .

யார் அந்த வட்டி காரன் , நா எதுக்கு அவனுக்கு காபி தரணும் , யார் இந்த வெத்தலை பீடா சாப்பிடும் சேட்ஜி . என் அண்ணனா , தம்பியா ,தோழனா , நான் எதற்கு இவன் பெயரை ஞாபக வைத்துக்கொள்ளனும் . என்னமா மறந்திட்டியான்னு கேக்றான் .நான் எதுக்கு கொத்தமல்லியை இனாம கேக்க போறேன் , இவனுக்கு ரசத்துல போட்டா பிடிக்கும்னுதானே போடறேன். பாதாம் அல்வாவா பண்ணி நானா சாப்பிட்டேன் , வள்ளிக்கு பிடிக்கும்னு பண்ணி தரேன்னு சொன்னது நான்தானே . 

முந்திரி கேக் பண்ணி குடுத்தது யார் மாமாவுக்கு .

இப்போ எல்லாரும் எண்ணெயை மட்டும் கேள்வி கேட்டா எப்படி அது சரியாகும் ?

திவகர் என்ன பண்றானோ பண்ணட்டும். நம்ப நம்ம வாழ்க்கையை பாத்துப்போம். இணைக்கு நடந்தமாரி அடுத்த முறை நடக்க கூடாது.

எல்லாத்தயும் அவனுக்கு குடுத்து, கடைசில எனக்கு அசிங்கம் மட்டும்தான் மிஞ்சியிருக்கு.  என்னோட டெபாசிட் பணத்தை நா அவன்கிட்ட குடுத்து வச்சிருக்கேன் ,அத அவன் வச்சிருக்கானோ இல்ல காலி பண்டானோ தெரியல , ஒரு அஞ்சுலட்சம் , அத வாங்கி, இருக்கர எல்லாருக்கும் செட்டில் பண்ணிடனும். முதல்ல அவன்கிட்ட அது இருக்கான்னு கேக்கணும் உதவினா என்கிட்ட ஒரு பைசாவும் இல்லாம போச்சு. காய்கறி கடைலருந்து, வட்டி காரங்க வரைக்கும் எல்லாம் நாந்தான் மாத்தணும்,பண்றேன் பண்றேன் என்று தன்னைக்குதானே சொல்லிக்கொண்டாள்.  

“கோபம், ஏமாற்றம், துக்கம் அதோடு நாம் ஜெயிக்கணும் என்ற எண்ணமும் அவளின் கண்ணில் கொஞ்சம் மய்யில் கலந்து கண்ணீரும் ஒரு துளி எட்டி பார்த்தது”.

நான்கு மணி ஆனது. நடந்த அனைத்தையும் யோசித்து கோப பட்டாலும், அவள்  எடுத்த ஒருசில முடிவுகள் அவளுக்கு கொஞ்சம் நம்பிக்கையையும் தந்தது. டெபாசிட் பணம் இல்லாவிட்டாலும் ,அவளுக்கென்று ஒரு சில உள்ளங்கள் இருக்கின்ன்றன , அவை நமக்கு உதவும் என்று நினைத்தால் . டெபாசிட் பணம் இல்லைனா என்ன , கொஞ்ச கொஞ்சமா வேலைக்கு போறேன், பணம் சம்பாதிச்சு கொடுக்கறேன் .

விறுவிறுவென்று சமயலறைக்கு சென்றால், அடுப்பை பற்ற வைத்தால், ஒரு டம்பளரில் பூஸ்ட்டை போட்டு,சர்க்கரையை போட்டுகொண்டு, பாலை சுடவைத்தால்.

நல்ல சூடான, பாலை, டம்பளரில் ஊற்றி, ஆத்தி, அறைக்கு வந்து , கரைத்து குடித்தால்.

நான்கு பதினைந்து 

போனை பார்த்தாள்! அடுத்து யார் கூப்டா போறாங்கன்னு தெரியல என்று பயந்தாள், பதறினாள்.  முகம் மாறியது .அதையே பார்த்து கொண்டிருந்தாள், போனில் வெளிச்சம் வருமா, யாரவது அழைப்பார்களா என்றே பார்த்துக்கொண்டிருந்தாள். இரண்டு நிமிஷம் அதையே பார்த்து கொண்திரிந்தால்  யாரிடமும் இருந்து அழைப்பு வரவில்லை. ஜன்னல் வெளியே, நேராக சூரியனின் ஒளி வீட்டின் தரையை குத்தியது.

மதியம் ரேஷ்மாவந்துட்டபோனப்புறம்கதவைதிறக்கவேயில்லை. நான்கு மணி நேரம் பிறகு , கதவை திறந்தாள், ஒளி வீட்டுக்குள் வந்தது. அறையில்  வெளிச்சம். வெளியே அக்கம்பக்கம்  பார்த்துதான் படியை  வீட்டு கீழே இறங்கினால், தெரு கொஞ்சம் அமைதியாய் இருந்துது. வாசற்படியில் உட்கார்ந்து மண்ணை பார்த்து கொண்டே கதவின்மேல் சாய்ந்து சிலையானால்.  

ஊருல வேற என்ன விசேஷம் . அவர் எப்படி இருக்கார். நீ நன்னா இருக்கியா?கனவு  என்று  நினைத்து  , முணுமுணுத்தாள்.

அடியே! சொல்லுடி . அட! என்னடி , தூங்கற . என்னாச்சு, உள்ளே தூங்கவேண்டியதானே . அவள் அக்காவின் குரல் கேட்டு அவசரமாக எழுந்தாள் , காத்து வாங்கலாம்ன்னு இங்க உக்காந்தேன், அப்படியே தூங்கிட்டேன். கண்ணை கசக்கி, பாதி தூக்கத்தில் இருந்தால். உள்ள வாங்கக்கா. 

என்னடி,  ஒரே தூசியா இருக்கு, பெருக்கலயா ஆத்த, என்று பேசிக்கொண்டே அக்கா  வெளக்கமாறை எடுத்து பெருகினாள். அவள் எதுவும் பேசாமல், பொறுமையாக, பரவால்லக்கா  இருக்கட்டும், நா பண்றேன், நீங்க விடுங்க. அடி சும்மா இரு, இங்க பாரு, வாலி பூராவும் துனியா இருக்கு, தொவைக்கலயா என்ன ஆச்சு, ஏன் எல்லாம், போட்டது போட்டமாரியே இருக்கு. எங்க திவாகர் . வேளைக்கு போயிருக்காரா ? அவள் எதுவும் பேசாமல், தண்ணீர் அடித்து முகத்தை அலம்பிக்கொண்டாள். அவள் கண்ணாடியில், பார்த்தால், முகம் சோம்பலாகவும் , சோர்வாகவும் இருந்தது .

இந்தாங்க தண்ணி என்று சொம்பில் குடுத்தாள்,  என்னடி ஆச்சு, ஒரு மாறி இருக்க. என்ன சொல்றது நான் உங்ககிட்ட . ஒன்னு ரெண்டுன்னா பரவால்ல , அத்தனை இருக்கு. நீங்க காலைல வரல , ஊருல இருக்கற எல்லாம் இங்க தான் வந்தானுங்க. 

எதுக்கு என்றால் அக்கா ?

எதுக்கு வருவானுக. எல்லாம் துட்டுக்குதான் , ஒவ்வர்த்தரா வந்து, ஒவ்வருபேர் சொல்லி, ஒவ்வரு பணம் கேட்டாங்க . இல்ல இல்லன்னு சொல்லி, வாயே “ஈன்னு”  இழுத்துருக்கு பாருங்க .

நோக்கு என்னடி கடன். அதான் உன் ஆமடையான் , எல்லாத்துக்கும் குடுக்கறாரே. அது போறாதா ?போதும்க்கா , நா உங்கள கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு சொல்லல, எல்லாம் கடன்லதான் பொது, இந்த வீட்டுல இருந்து, வாங்கற மளிகை சாமான் வரைக்கும். என்னடி, இப்படி சொல்ற, ஏன் , அவர் என்ன பண்றார் ? போன் வந்தது ,அவள் பயந்தாள்,  யாருன்னு தெரியலையே, அக்காவை பார்த்தால் . போனை பதற்றத்துடன் எடுத்தால்.

” ஹலோ” என்று பொறுமையாக , பயந்து சொன்னால்.

” கடன்தொல்லையா இஎம்ஐ கட்டணுமா ? ஒன்னை கிளிக் பண்ணுங்க. என்றது கஸ்டமர் கேர் .

பெரும் மூச்சுவிட்டு , அதை   கட்செய்தால்.  யாரு ? இருக்கற , பிரச்சனைல இவனுங்கவேற . பணம் வேணுமான்னு தொந்தரவு பண்றாங்க. இவனுங்கள உதைச்சா சரி ஆயிடும் முதல்ல, எல்லாருக்கும் போன போட்டு, கடன் தரேன் கடன் தரேன்னு  கெடுத்து வச்சிருக்காங்க.

 ஆமா அக்கா.ஆச காமிச்சே கெடுத்தறாங்க .

சரி, எங்க போயிருக்கார் திவாகர் ?

அவங்க தங்கவீட்டுக்கு போயிருக்காங்க. போயி ஒரு வாரம் ஆச்சு. பேசவும் இல்ல, என்ன பண்றாங்கன்னு சொல்லவும் இல்லை. போன வேற ஒடச்சிட்டாரு. எதுக்கு, அங்க போயிருக்கார் அவர் ? என்கிட்ட தங்கச்சிய பாத்து ரொம்ப நாள் ஆச்சு, வா போய்ட்டு பாத்துட்டு வரலாம்னு சொன்னார். எனக்கு அப்போ ரொம்ப ஒடம்பு முடியல….

“நீ போயி! பாத்துட்டு வா திவா, நா அடுத்த வாட்டி வரேன். தங்கச்சிய கேட்டேன்னு சொல்லு . அங்க போய்ட்டு போன் பண்ணுனு.நாந்தான் சொல்லி அனுப்பிச்சேன். ஆனா, ஒரு போன் கூட இன்னு பண்ணல. அவர் அங்க போயாச்சுனா , அவளவுதான் . நான் மாட்டிண்டேன் இங்க. அப்படியா சங்கதி. எல்லாம் மொத்தமா எத்தனை?

அது இருக்கும் அக்கா, அதுக்கு என்ன பஞ்சம். ஒடம்புல ஆசையை எப்படி தீர தீர இன்னு வேணு இன்னு வேணுன்னு சொல்லுமோ அதே மாறித்தான் எங்களுக்கும் என்றால். அக்கா அவளை பார்த்து ‘இவள் சொல்வதை பார்த்துக்கொண்டே இருந்தால். காற்று கொஞ்சம் பலமாக வீச, கதவு தானாக ,  முடியது.

முடிய கதவுகள்

                                                         5

சைக்கிளை மிதித்து கொண்டு, முகம் இரண்டு நாட்களாக சரியான தூக்கம் இல்லாதது போல், இருந்தது . வியர்வையா , தண்ணியா என்று தெரியாத அளவுக்கு அவன் உடம்பில் வியர்வை நனைந்திருந்தது .மதியம் பன்னிரண்டு மணி வெயில். அக்னி நட்சத்திர வெயில், மண்டையில் குத்தியது. மூச்சு வாங்கியது. ஊரில் பெரிதாய் அன்று மக்கள் நடமாடும் நோட்டம் தெரியவில்லை. இவன் மயக்கம் போட்டு விழுந்தால் கூட பார்க்க எவரும் இருக்க மாட்டார்கள் .

‘எப்போமே’ கூட்டமா இருக்குற இடம் , இன்னைக்கு யாருமே இல்லாம அமைதியா இருக்கு . இப்படியே நம்ப ராஜாங்கம் வீடும் இருந்தா , கொஞ்சம் கேட்டு வாங்கிட்டு போய்டலாம் என்றான் திவாகர் .

ஹேமா பாவம், தனியா கஷ்ட படுவா, ஒரு வாரமா பேசவே இல்ல அவள்ட்ட என்று பெடலை அழுத்தி சொன்னான். இன்னைக்கு மூணாம் தேதி, நேத்திக்கே எல்லாம் வந்திருப்பானுங்க . வட்டி காரன்ல இருந்து அந்த ரேஷ்மா  பொண்ணுவரைக்கும். எல்லாம் ஆரம்பத்துல நல்லாத்தான் இருக்காங்க, அப்பறம்தான் தோல் உரியது ,

என்ன கஷ்டமோ .என்றுசைக்கிளைமிதித்துகொண்டேதெருவை கடந்தான்.

யப்பா திவாகரு. மணி இப்பவே பதினொன்னு ஆச்சு. நீ சாப்பிட்டு போ. அவன் இருக்கானா இல்லையோ. தெம்பா சைக்கிளை ஓட்டிட்டு போணும்ல.ஒரு வா சாப்பிட்டு போ என்று அம்மா சொன்னால் , நேரமாச்சுனு திங்காம வந்தேன்.ஹப்பா !  மூச்சு இறக்கிது.இந்த முன்னாடியும் பின்னாடியும் வீல்ல காத்து இல்ல, கொஞ்சம் அடிச்சிட்டு போப்பா என்று சித்தப்பா சொன்ன ஞாபகம் வந்தது. கொஞ்ச தூரம் ஓட்டினான். மூச்சு வாங்கியது அவனுக்கு.

ஹேமாவை நினைத்தான் – ஹேமா – என் காதலி, என் சிநேகிதி, என் புது மனைவி, என் ஒருவருட மனைவி, எல்லாம் நல்லாதான் இருக்கு. காசுன்னு வரப்போதான் , லாபம் தெரியூது , நஷ்டம்னு வரப்போதான் கோவம் வருது. என் மேல கோபம், என் அலட்சியம்மேல கோவம். தங்கச்சிக்கு, செயின் வாங்கித்தரணும்னா என் காசுல வாங்கி குடுத்தீர்க்கணும், அத விட்டுட்டு அவ காச எடுத்தா கோவம் வருமா வராதா ?  ஹேமா – ஒரு அழகு . அழகிகளின் அழகை நான் அபகரித்துவிட்டேன். அவர் அப்பா சொன்ன வார்த்தைகள்’ இனி உங்கள் பொறுப்பு ஹேமா’. அன்று மணமுடித்தேன், கூடவே என் காதலையும் முடித்தேன் என்றுதான் தோன்றுகிறது .ஏதோ ஒரு புயல் எங்கள் வீட்டில் அடித்தது .

அதன் தாக்கம் கடன், அன்புக்கடன், கோவகடன், பிச்சைக்கடன்,சொந்தக்கடன், நண்பர்கள் கடன், தெரியாத உள்ளம் தந்த பசிக்கடன் என்று ஏறிகொண்டே போனது . வெயிலின் தாக்கத்தை விட ,நம் மனவலியின் தாக்கம் அதிகம் .

ஒரு கடனை அடைக்க மறுக்கடன், அதை அடைக்க மறு. அதை அடைக்க மறுக்கடன் என்று நான் காதலித்த பெண்ணை தங்கத்தட்டில் தாங்கவேண்டிய பெண்ணை என் தேவதயை வியர்வை கட்டிலில்  ( சமயக்கட்டில்) காய விட்டேன். நான் என்ன புருஷன் . என் மாமனார் என்னிடம் சொன்ன, கேட்டுக்கொண்ட விஷயங்கள் எதையும் நான் பூர்த்தி செய்யவில்லை. காதலித்தால் மட்டும் போதுமா ? அதை கட்டிக்காக்க வேண்டாமா ? கல்யாணத்தில் காதல் துடங்கவேண்டும் ,இங்கே அது பல்டி அடித்தது .

அடுத்த தெருவை கடந்தான். மணவார்த்தைகள் பாடல்போல் ஓடிக்கொண்டே இருந்துது .

“நான் அவளிடம் சொன்னேன் ‘ எந்த நேரத்திலும், நான் தனியாக இருந்து பாடுபடுவேனே தவிர, உன்னை படவிடமாட்டேன் . இன்று அது எதிர்முறையாக நிகழ்ந்து விட்டது . ‘அவள் அங்கே, நான் இங்கே’.

அவளின் கஷ்டத்தை போக்க நான் வியர்வை சிந்துகிறேன், அதில் என் கண்ணீரும் சேர்ந்து விழுகிறது . என் ஹேமாவை , நான் பாதுகாக்கவேண்டிய ஹேமாவை விட்டு வந்துவிட்டேன் . நான் அவளை எப்படி சந்திப்பேன். என் காதலை தவற விட்டேன். மன்னிப்பாளா ? கண்டிப்பா மன்னிப்பா . அவளோட பழைய வாழ்க்கைய அவளுக்கு நான் தரணும், அவ எப்படி இருந்தாலோ, அப்படியே . எல்லாமே அவளுக்கு கிடைக்கணும் . நான் அதுக்கு  காரணமா இருப்பேன். 

மணவார்த்தைகள் நின்றது.

சைக்கிளை நிறுத்தி காத்துக்கடைக்கு தள்ளிச்சென்றான்.

‘என்ன அன்னாச்சி ‘ எப்படி பொது கடைலாம் ?’ஆண்டவன் புண்ணியத்துல நல்லபொதுப்பா ‘ என்னதான் பைக்கு, ஸ்கூட்டி, கார் வந்தாலும், அவசரத்துக்கு சைக்கிள்தான் உதவும். ‘ நமக்கு அதுதான் தெய்வம் என்றார் அண்ணாச்சி.

என்ன அப்படி பாக்கரீரு  என்னய என்று சொல்லிக்கொண்டே காத்துஅடித்தார் .

எவளோ அண்ணாச்சி ?

பத்து ரூபாய்ப்பா. இந்தாங்க  வரேன்னேன் .

‘நல்லது’ எங்க இந்த அண்ணாச்சி ஏதாவது ஹேமாவ பத்தி கேப்பாரோன்னு நினச்சேன், ஒன்னு கேக்கல . சைக்கிளில் ஏறினான்.

மிதித்தான். இப்பொழுது கொஞ்சம் கணம் கம்மியானது போல் உணர்ந்தான். காத்து ஏறியது. அவனின் மனவர்த்தைகள் கொஞ்சம் நிதானத்தையம் நம்பிக்கையும் தந்தது. ‘ ஹேமா – அன்பான ஹேமா , மன்னிச்சுடு. என்னால உன்னைக் போன் பண்ண முடியல , போன தண்ணீல போட்டுட்டான் ராகேஷ். என்ன தீட்டாத . என்ன வெறுக்காத . நான் உன்னைக் நிம்மதிய தரேன் கண்டிப்பா. இன்னு ஒரே நாள்தான். நா அவரோட வீட்டுக்கு போயிட்டு , வேணுங்கற

பணத்தை கடனா வாங்கிட்டேன்னு வை, என்னோட உன்னோட நம்மளோட எல்லா கடனும் தீர்ந்துடும் .  வட்டிக்காரனுக்கு குடுக்க வேண்டியது, காய்கறி அம்மாவுக்கு குடுத்து கொஞ்சம் கருவேப்பலையை  வாங்கணும், ரசம் வச்ச குடிப்போம் என்று சொல்லி சிரித்தான். . ரொம்ப பேசும் அந்த அம்மா . நேத்திக்கி ஹேமா காய் வாங்கினால தெரியல . இன்னிக்கி வீட்டுக்கு போயிட்டு தங்கச்சி போன வாங்கி , நல்ல செய்தியோட சொல்றேன் . ஹேமா . ஹேமா . என் கனவு பெண் ஹேமா.

வேண்டுகிறேன் என் குலசாமி கிட்ட, எல்லாமே நல்லபடியா நடக்கும்னு. எல்லாம் நல்லபடியா போச்சுன்னா , உன்னக்கு நான் கடன்வாங்கியாச்சும் உன் கோவிலுக்கு நான் கும்பாபிஷேகம் பண்றேன். எங்க சாமி , ஒரே சாமி ,சின்ன சாமி ,பெருசா காசு ஆகாது .

                                   கடன். கடன். கடன்.

                                                        6     

மனதில் நினைத்துக்கொண்டே, சைக்கிளை மிதித்துக்கொண்டு ராஜாங்கம் அண்ணனை பார்க்க சென்றான்.

ராஜாங்கம் அண்ணன். திவாகருக்கு நன்றாக தெரியும், சின்ன வயசில் அவனின் அப்பா அவர்கூட கொஞ்ச நாட்கள் வேலை செய்தார்.

அப்பா , கடன்தொல்லைல இருந்து தப்பிச்சது, ராஜாங்கம் அண்ணாவோடசெந்தபிறவுதான்.”என்னைக்கும் ஒரு நம்பிக்கை’

அண்ணன்கிட்ட போனா…. “தீர்வு கிடைக்கும்னு”

“எல்லாம் எதுக்காக” ?

“ஹேமாவா நல்லா பாத்துக்கணும்’ அவகூட சிரிச்சு பேசி, பல மாசம் ஆச்சு. அவ என்கூட பேசறதை விட , பக்கத்து வீட்டுல போயி புலம்பறதுதான் அதிகம் ஆயிடிச்சு. இனிமே அதுக்கு அனுமதிக்கமாட்டேன். ராஜாங்கம் அண்ணன் இருக்கும் தெருவுக்கு வந்து அடைந்தான் என்று நினைத்தான்.

‘அதே வீடுகள், அப்படியே இருக்கு. எதுவும் மாறல . அதே புள்ளையார் கோவில்.’இங்கதான்’ நா ஹேமாவை கூட்டிட்டு வந்தேன். இவர்தான் எங்க தொழன்னு அவ சொல்லுவா .

ஒருவாட்டிநா “யாருனு கேட்டேன்’ அவ நீதான் “என்னோட தொல்லையாக போறேன்னு சொல்லுவா வேடிக்கையாக ” இப்படியே பேசிட்டு இருப்போம்.

“ராஜாங்கம் அண்ணனின் தெரு”வந்தது .

அழகாக அலங்கரிக்க பட்டு இருந்துது. ஒவ்வரு வீட்டின் வாசலிலும் தோரணம் கட்டி, வாழ இலைகள் கட்டி இருந்துது. தெரு அன்று போல்,இன்றும் அதே அலங்காரத்துடன் நிறைந்து இருந்தது. எப்போமே யார் வீட்ல கல்யாணமோ ,சடங்கோ நடந்தா , ராஜாங்கம் அன்னான் உதவாம இருக்க மாட்டார்,அது அவரோட பழக்கம் . அதை பார்க்க நல்ல இருக்கு . எணக்கு சந்தோஷமா இருக்கு , என்ன பாத்தோன அண்ணன் சந்தோஷ படப்போறார் . திவாகர் அங்கே இருந்த ஒரு சின்னபையனிடம்

‘தம்பி, இங்க ராஜ அண்ணன் வீடு ஏது ? “

அவன் , ஐஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் .

“அங்க போய்ட்டு, ரைட் பக்கத்துல ஒரு வீடு இருக்கும், புதுசா ஆரஞ்சு கலருல பெயிண்ட் அடிச்சிருப்பாங்க.

“அதுதான்”

“தேங்க்ஸ்”தம்பி என்று சொல்லி சட்டென்று சைக்கிளை வேகமாக தள்ளினான்.

இந்த சிறுவன் ‘ஐஸ் கிரீமை சாப்பிட்டுக்கொண்டே என்  சைக்கிளை விரும்பி,ரசித்து  பார்த்தான்” .

திவாகர் , அந்த சிறுவன் சொன்ன வழியில் ஆரஞ்சு கலர் வீட்டுக்கு வந்து நின்றான்.

பெரும் மூச்சு விட்டான் . வீடு அழகாய் கட்டி இருந்துது. வீட்டின் வெளியே , காவலர்களுக்கு கட்டப்பட்ட பழைய குட்டி வீடு , இன்னும் இருந்தது. அவனுக்கு ராஜாங்கம் அண்ணனின் பழய முகம் நினைவுக்கு வந்தது.. கொஞ்ச சந்தோஷமும், கொஞ்சம் பதட்டமும் , முகத்தில் தெரிய, கதவை திறந்து உள்ளே சென்றான்.  

‘வீட்டுல வேலைகாரங்க புது முகங்கள் நரியா இருக்கு’ என்றான் திவாகர்.

ஒரு வயதான பாட்டிமா’ கையில் குச்சியை வைத்து காலை ஒருபக்கம் நொண்டி நொண்டி நடந்துவந்தால் .இவன் முன்னாடி போயி” பாட்டிமா ” எண்ணெயை அடையாளம் தெரியுதா ?

பாட்டி : “மூஞ்சி எங்கேயோ பாத்தா மாதிரி இருக்கு.  யாருன்னு தெரியல . என்பது வயசு ஆச்சு என்னைக் . நீ யாரு என்றால் ” என்னக்கு அடையாளம் தெரியல .

திவாகர் பாட்டி .

‘யார் . நம்ப பரமேஸ்வரன் புள்ளயா நீ ‘ ?

ஆமா பாட்டி.

பாட்டியின் முகம் மாறியது. கோபம் வந்தது.உன் அப்பன் புத்தி கொஞ்ச கூட உன்னைக் இல்லையா ? யாரையோ கூட்டிண்டு போயி கல்யாணம் பண்ணிட்டு உன் அப்பாக்கு அசிங்கத்தை குடுத்துட்டியே . என் முன்னாடியே நீக்காத. போ. உன்னால உன் அப்பனுக்குதான் அசிங்கம். இதுல என் புள்ளைய பார்க்க வந்தியா . டேய் முருகா .

முருகா.

முருகன்.. அந்த வீட்டின் மூத்த காவல்காரன் ஓடிவந்தான் , லுங்கியை பிடித்துக்கொண்டான்.

சொல்லுங்க மா . என்ன வேணும் .இந்த பய என் முன்னாடியே வர கூடாது, அவனை இங்க இருந்து போ சொல்லு என்று கோவத்தில் கத்திவிட்டு நொண்டி நொண்டி நடந்து வீட்டுக்கு சென்றால்.

சரி மா ! நா சொல்றேன். நீங்க பார்த்து மெதுவா போங்க.

முருகா திவாகரை பார்த்து : அய்யாவுக்கு யாரை பாக்கணும் ? தப்பா எடுத்துக்காதீங்க , அது முதலாளியோட அம்மா.

வெளி ஊருல இருந்து யாரவது வந்தா , இப்படித்தான் பேசிடுவாங்க. அவங்களுக்கு அந்த விஷயம் கெட்டுதுல இருந்து கோபப்படறாங்க .

சரி, அதாவிடுங்கசொல்லுங்க . நீங்க யார் ? யார பாக்கணும் ?

என் பேர் ‘திவாகர்’ நா இங்கதான் …

இருங்க இருங்க .அட! பாவமே . நீதானா அது ,என்னப்பா இப்படி பண்ணிட்ட. உன்விஷயத்தைகேட்டதுலஇருந்துஅம்மாயாரையும்நம்பறதேஇல்ல.

என்னகாதலோஎன்றுகேட்டார்.

சரி வுடு தம்பி ,அந்த பொண்ணு எப்படியிருக்கு ,நீங்கசந்தோஷமா இருக்கீங்களா … நல்ல இருக்கேன்

ராஜா அண்ணன் இருக்காரா?

ஐயோ தம்பி .என்ன தம்பி ,நேத்திக்கி காலைல இருந்து உங்க போனுக்கு எத்தனை வாட்டி கூப்டாரு தெரியுமா ஐய்யா .

என்ன ஆச்சு அவருக்கு ?

அவர் நெத்தி ராத்திரி ஊருக்கு போய்ட்டாரு. அவரோட பொஞ்சாதிக்கு உடம்பு முடியல. அவசரமா வர சொல்லிட்டாங்கனு களம்பிட்டாரு. 

போறத்துக்கு முன்னாடி உங்ககிட்ட சொல்லணும்னு சொன்னார்.

அப்படியா.

எப்போ வருவார் அய்யா

தெரியலைங்க . அம்மாவுக்கு கொஞ்ச சீரியஸ் ல இருக்காங்க. அவசரத்துல இருந்த பணத்தை எடுத்துக்குனு போய்ட்டார் .

அப்படியா….

முகம் திரும்பவும் பழைய கவலைகளால் நிரம்பியது.  

ஒரு வினாடி, சிலை ஆனான்.

முருகா திவாகரை கூப்பிட்டான். காதில் விழவில்லை திவாகருக்கு.

திரும்பவும் கூப்பிட்டான்.விழித்துக்கொண்டான்.

என்ன ஆச்சு. 

ஒன்னு இல்ல . அய்யாவ பாத்துட்டு கொஞ்ச காசு கேட்டுட்டு போலாம்னு வந்தேன், ஊருல கொஞ்ச கஷ்டமா இருக்கு, என்ன பண்றதுன்னு தெரியல ,சரி அன்னே,நா வரேன் . உங்க உதவிக்கு நன்றி என்று சொல்லிவிட்டு உலகமே இவனுக்கு மட்டும் மெதுவாக இருப்பது போல், பொறுமையாக நடந்தான்.

‘காக்க கத்தும் சப்தம், குழந்தைகளின் சிரிப்பு, மக்கள் கூட்டம் ” எல்லாமே இவனுக்கு எதிரியாக தெரிந்தது.

‘எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க’ நான் மட்டும்,’ பணத்தை தேடி போறேன், அதுவும் ஏமாந்துட்டேன்.

எல்லாரையும் பார்த்தாலே வெறுப்பா இருக்கு.

அந்த சின்ன பய்யன் என்னய பாத்து சிரிக்கிறான் , எல்லாரும் என்னய பாத்து என்னோட ஏமாந்த விஷயத்தை பார்த்து கேலி பண்ணி பேசுற மாதிரி எண்ணம் மாறி மாறி வந்தது .

ஹேமாகிட்ட சொல்லல . சொல்லி இருந்தா அவளும் ஏமாந்து போயிருப்பா .சைக்கிளை ஓட்ட தெம்பு மனதில் இல்லை. அவன் ராஜாங்கம் அண்ணனை பார்க்க ஆசையாக இருந்தான். கடனாக ஒரு லட்சம் கேட்க வந்தான். ஹேமாவை பூவை போல் உதிராமல் பார்க்க நினைத்தான். இனிமேல் என்னால் அவளுக்கு எப்பவுமே கஷ்டம்தான் என்று சைக்கிளை தள்ளிக்கொண்டே போனான். இவர் எப்போ வருவாரு , அதுக்குள்ள அங்க எல்லாரும் பைசா பைசான்னு கேட்டு நச்சரிப்பாங்க ,யார்ட்ட கேக்க , தங்கச்சிட்ட கேக்கலாமா ?

இதான் .இதுதான் ,இப்படியே தான் இருக்கும் ,ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன்” ஓயா கடன் . இதெல்லாம் யாருக்கு தெரியபோது . நான் ஒழுங்கா குடும்பத்தை நடத்தலைன்னு மட்டும் பேர் வரும். 

எவளோ கஷ்டம், எவளோ நெருக்கடின்னு யாருக்கு தெரியும் . யார்ட்ட சொல்றது .இதெலாம் யார் கேப்பாங்க ?

என் ஹேமாவ  தவற … 

 முடிய கதவுகள், தட்டும் சப்தம் கேட்டது.

ஹேமா நல்ல தூங்கிவிட்டாள். ஹேமா தூக்கத்தில் இருந்து எழுந்தாள், மணியை பார்த்தால் ‘

7 .30  மணி காலை.

அக்கா கூப்பிட்டால். வரேன் அக்கா .

கதவை  திறந்தாள்.

கண்ணை கசக்கி  வாங்க அக்கா என்றால்.

ஆவலுடன் ஒரு அம்மா வந்துஇருந்தால்.

“ஹேமா . இவங்க பேர் ஷீலா . திவாகர் இவங்ககிட்ட ஒரு முப்பதாயிரம் கடன் வாங்கி இருக்கான்.

அவள் ‘ஐயோ’ என்று கடும் சோகத்தில் . எதுக்குன்னு சொன்னானா மேடம் உங்ககிட்ட என்றால் .

‘ஹேமாவுக்கு  பொறந்த நாள் வருது, அதனால ஒரு நெக்லஸ் வாங்கித்தரணும்னு சொல்லி வாங்கிண்டு போனார் ‘.

இந்த மாசம் தரேன்னு சொன்னாங்க . அதான் போன் பண்ணேன், எடுக்கல ,சரி அதான் நேர்ல வரலாம்னு . வந்தா .. இப்போதான் சொல்றாங்க, அவர் ஊருல இல்லைன்னு .

என்ன இதெல்லாம் ? அவரை நம்பித்தான் குடுத்தேன். 

என்னக்கு வேற ஏதா காண்டாக்ட் நம்பர் குடுங்க என்றால் , நான் பேசணும் .அக்கா ‘ குறுக்கே ‘ பேசினால்.ஷீலா” ஹேமா கிட்ட சொன்ன போறும். அவ ஏதாவது பண்ணி உங்களுக்கு பைசா குடுத்துடுவா . நா காரண்டீ அதுக்கு . அவர் ஊருல இருக்கார் ,இதெலாம் அவாளுக்கு தெரிய வேண்டாம் என்றால்.

சரிடி . நீ பாத்துக்கோ. கொஞ்சம் சீக்கிரமா கடைச்ச நல்லா இருக்கும். உன்ன நம்பித்தான் போறேன். 

சரி. நா தரேன். நீ வா உள்ள. காபி சாப்பிட்டு போ.

இல்லடி. “சம் அதர் டே”. என்னைக் கொஞ்சம் வேலை இருக்கு. நா போகணும். இதே மாறி இன்னு மூணு வீட்டுக்கு போனும் .பாய்.

ஹேமா ” உள்ளே வந்து ஊஞ்சலில் உட்கார்ந்தாள். ஆழ்ந்த யோசனையில்.

என்னடி  இந்த திவாகர் . இப்படி பண்றான்.இன்னு கல்யாணமாகி ஒரு வருஷம் கூட முழுசா முடியலை ,அதுக்குள்ள இவ்வளவு கடனா. பகவானே . இன்னு குழந்தை வந்திடிச்சுன்னா நாறிடுவேல் போலருக்கே அந்த காலத்துல நாங்களும் தான் குடும்ப நடத்தினோம். அவன் வேலைக்கு போரான இல்லையா. பேசாம நீ வேலைக்கு போ.

அப்போதான் உன்னால தப்பிக்க முடியும்” இந்த ஊருல லாம் கஷ்டம் .என்ன குடும்பம் நடத்தறானோ .

அக்கா ” திவாகர் எனக்காக , என் சந்தோஷத்துக்காக கடன் வாங்கியிருக்கான்’ பாத்தீங்களா .என்னக்கு ஒரு மூணு மாசம் முன்னாடி ஒரு நெக்லஸ் கேட்ருந்தேன் ,அப்போ முடியல ,அதான் போன வாரம் என் பர்த்டேக்கு வாங்கி தந்துருக்கான். 

நா அத நேத்திக்கு கூட புரிஞ்சிக்கல .கஷ்டம்தான் ,என் மேலயும் தப்பு இருக்கு . அவன் சக்திக்கு மிஞ்சின பொருளெல்லாம் கேட்டேன் , என்ன நன்னா பாத்துக்கணும்னு எதையும் யோசிக்காம வாங்கறான். 

அவன் நான் சந்தோஷமா இருக்கணும்னு தான் , இப்போ கூட ஊருல எங்கேயோ காசு வாங்க போயிருக்கான்” . அடுத்த மாசம் வெட்டிங் டே” வருது. 

அது சரிடி . அதுக்குன்னு . எத்தனை நாள் இப்படியே இருக்க போறேள். கடன் வாங்கினா அத குடுக்க சம்பாதிக்க வேண்டாமா ? சேமிக்க வேண்டாமா ? நீங்க ரெண்டு பெர் மட்டும்தான் இருக்கேள் இப்போ வரைக்கும்,அதுக்கே இப்படி.

இது என்ன ‘ இலவசமா சர்க்கரை, அரிசி, மாச சாமான்லாம் தர ஊரா ? எல்லாம் மூணு மடங்கு இருக்கு .

காதலும் சந்தோஷமும் இருந்தா , மத்ததுக்கெலாம் என்ன வழி .

“தெரியல அக்கா ” நான் அவன நம்பி வந்துட்டேன். என்னோட ஒரு பாதி உசுர அவனுக்கு கொடுத்துட்டேன் . பக்க பலமா இருப்போம்னுதான் கல்யாணம்  ஆகும்போது சொன்னேன். அதை நானும் பாதுகாக்க வேண்டாமா  சொல்லுங்க.

என்னடி நீ இப்படி பேசற ? ரெண்டு பெரும் ஒழுங்கா கட்டுப்பாடா குடும்பத்தை நடத்தினாதான் முடியும் . இப்படி போற இடமெல்லாம் கடன் வாங்கிண்டே இருந்தா, என்ன செய்வதா உத்தேசம்  உன்னக்கு ?

சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தான். மணி ரெண்டரை ஆனது. காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்தான்.

அண்ணனை பார்க்க போகும் உற்சாகத்தில், எதுவும் சாப்பிடாமல் வந்தான்.

மயக்கமாக இருந்தது.

கொஞ்ச தூரம் தள்ளினான்.ஓரத்தில், ஒரு டேங்கில் , தண்ணீர் குடித்தான். முகம் கழுவினான். தெம்பு இல்லை உடம்பில் . பசி வந்தது. ரோட்டு கடையில் பரோட்டா போட்டுக்கொண்டிருந்தார்கள். வாசனை மூக்கை வா வா என்று அழைத்தது.

பையில் காசு இல்லை. இருந்த பத்து ரூபாயில் காத்து அடித்துவிட்டான். பர்ஸை வீட்டில் வைத்துவிட்டான். அதில் மட்டும் என்ன இருக்குபோது .

அங்கே போயி நின்றான். அண்ணா பரோட்டா ஒன்னு தரீங்களா .காசு நாளைக்கு குடுத்திடறேன் .

நீ யாருன்னே தெரியாது என்னைக் . முதலாளி கேட்டா என சொல்றது .போப்பா . காசு இல்லனா தர முடியாது. காலைலேயே வண்டாங்க .

அவன் எதுவும் பேசாமல் நடந்தான் .

அவன் சின்ன வயதில் இருந்து பார்த்து இருந்த ‘பிள்ளையார் கோயிலில் அன்று’ பிரசாதம் வழங்கி கொண்டு இருந்தார்கள்”.

அவனுடைய ராசியான புள்ளையார் கோவிலில் பிரசாதம் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது என்று க்யூவில்  நின்று , தயிர்சாதம் வாங்கிக்கொண்டான்.

அதை, சாலை ஓரமாய் கீழே உட்கார்ந்து , பல பக்தர்கள், சாப்பாட்டுக்கு வழி இல்லாதவர்களோடு உட்கார்ந்து அவனும் சாப்பிட்டான். பசியோடு. ஊருல ஒவ்வருத்தர்கிட்ட என்ன சொல்றதுன்னு யோசிக்கக்கூட தெம்பு இல்லாமல் சாப்பாட்டை மட்டும் பார்த்து சாப்பிட்டான். எந்தயோசனையும்இல்லாமல்

ஹேமா : கொஞ்ச பாத்து இருங்கோ , எப்போமே இப்படி இருக்கறது உதவாது . கொஞ்ச சேமிச்சு வச்சிக்கோ , வேலைக்கு போ, அவனை கொஞ்ச கண்டிச் வை . பாத்துகோடி, சீக்கிரமா அந்த ஷீலாவுக்கு குடுக்கவேண்டியதை குடு. நா புறப்படறேன், எதனா வேணுனா சொல்லுடி .நான் வரேன்.

                           ஹேமா ‘அக்காவை அனுப்பிவிட்டு, அவளுடைய அன்றாட வேலைகளை செய்ய துடங்கினாள்” . அக்கா சொன்ன வார்த்தைகள் “ஞாபகம் வந்து கொண்டே இருந்துது, அவளுக்கு”. கொஞ்ச நேரம் அதையே நினைத்தால். எந்த பதிலும் தெரியவில்லை. தலைவலி தான் வந்தது. திவாகர் வரட்டும் ” பேசிக்கலாம் , நானும் அவனும் தானே சேர்ந்து சரி பண்ணனும். இதையே பேசி பேசி தலைவலிக்கிது  என்று எழுந்து குளிக்க சென்றால். 

முடிவுரை

     டப்பு டப்பு என்று கதவை தட்டும் சப்தம் கேட்டது .

“ஹேமா சமைத்து கொண்டிருந்தாள் , இப்போ யாருடா ,சரி பாப்போம் என்று கதவை திறந்தாள்” 

திறந்து ஒரு நொடி சந்தோஷத்தில் மூச்சு வாங்கியது . வாடா திவா , என்ன ஆள் நன்னாவே இல்ல  என்ன ஆச்சு, சாப்படவே இல்லையா, வா முதல்ல . அவன் எதுவும் சொல்லாமல் போயி நாற்காலியில் உட்கார்ந்தான் . ஹேமா உள்ளே போயி “தண்ணி எடுத்து வந்து குடுத்தாள். 

ஹேமா ! உன்கிட்ட கொஞ்ச பேசணும் என்றான். முதல்ல குளி , உன்னக்கு பிடிச்ச ரசம் பண்ணேன் ” சாப்புடுவோம் ,

கொஞ்சதூங்கு, மதியானமாபேசுவோம்என்றால்அப்பறம் மத்ததெல்லாம் பேசலாம். போ போயி குளிச்சிட்டு வா என்றால்.

அவன் பொறுமையாக எழுந்து , எப்போதான் இந்த ஓயாகடனுக்கெல்லாம் தீர்வோ தெரியல என்னக்கு ” என்று “சோரவாக ” சொல்லி குளிக்க சென்றான் .

                      “முடிய கதவு”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *